நமது மாணவ மாணவியரை வருங்காலத்தில் உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக்கிப் பார்த்து மகிழ வேண்டும் என்ற எனது ஆசையின் அடிப்படையில் உருவானதே “வாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்” என்ற இந்த நூல். இதைப் படிக்கும் மாணவ மாணவியருக்கு நாமும் விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நூல் நிச்சயம் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.