காலம் மாறி வருகிறது. கவனம் பெற்று வருகிறார்கள் சிறார் எழுத்தாளர்கள். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல் நூல்கள் மிகமிகக் குறைவே. அந்தக் குறையைப் போக்க எண்ணினார் எழுத்தாளர் ஆர்.வி.பதி அவர்கள். எண்ணத்திற்கு சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தார். கடுமையான உழைப்பில் இடையறாத உழைப்பில் அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் விளைவு “தற்கால சிறார் எழுத்தாளர்கள்” என்ற இந்த அருமையான நூல் நமக்குக் கிடைத்துள்ளது.