“மனதைத் தூய்மையாக்கும் துறவிக் கதைகள்” எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் நான் பல சந்தர்ப்பங்களில் படித்து கேட்டு ரசித்த கதைகளாகும்.
“மனதை தூய்மையாக்கும் துறவிக் கதைகள்” எனும் இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இதில் எழுதப்பட்டுள்ள சில கதைகளை நீங்களும் எங்கேயாவது படித்திருக்கலாம கேட்டிருக்கலாம். ஒவ்வொரு கதையும் படித்து முடித்தவுடன் சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. சில கதைகள் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த புத்தகம் உங்கள் மனதை மென்மையாக்கி நல்வழிப்படுத்தும் ஒரு ஊக்கசக்தியாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.