கவிஞர், தேசபக்தர், எழுத்தாளர், பலமொழிகள் அறிந்தவர், நேர்மையானவர், மனித நேய பண்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்களைக் கொண்டவர் மகாகவி என்று போற்றப்படும் பாரதியார். பாரதியைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான முறையில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல். மகாகவியின் பெயர்த்தி திருமதி.எஸ்.விஜயபாரதி அவர்கள் இந்த நூலைப் படித்து “எளிமையாக நேரடியாக எழுதியுள்ளதால் நூல் படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது. உயர்நிலைப்பள்ளிகளில் +1, +2 போன்ற வகுப்புகளில் தமிழ்ப் பாட நுலாக வைக்க வேண்டும்” என்று கடிதம் மூலம் பாராட்டிய நூல்.