வாசகர்களுக்கு வணக்கம். குழந்தை இலக்கியத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறார் எழுத்தாளர்களை ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி அமைப்பு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2010 தொடங்கி 2019 வரை பத்து சிறார் எழுத்தாளர்கள் இந்த உயரிய விருதினைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதினைப் பற்றியும் அதைப் பெற்றுத் தந்த நூல்களைப் பற்றியும் விருதினை வென்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டது இந்த நூல்.