இந்த பூமியில் தரைப்பகுதியில் மட்டுமின்றி கடலுக்குள்ளும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நம்மில் பலருக்கு இத்தகைய உயிரினங்களைப் பற்றி பெயரளவிற்குத்தான் தெரிந்திருக்கிறதே தவிர விரிவாக ஏதும் தெரியவில்லை. இன்றைய மாணவ மாணவியர் இதுபோன்ற பல விஷயங்களை அறிந்து தங்களுடைய அறிவை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தின் விளைவே இந்த புத்தகம். இந்த புத்தகத்தை உங்களுக்காக உங்களுக்குப் பிடித்தமான சுவாரஸ்யமான உரைநடை வடிவத்தில் எழுதியுள்ளேன்.