“பன்னிரு ஆழ்வார்களின் கதைகள்” எனும் இந்த புத்தகத்தை எழுதியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர்கள், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள், இல்லத்தரசிகள், மாணவ மாணவியர் என அனைத்து தரப்பினருக்கும் சுலபமாய் புரியும் வண்ணம் மிக எளிய தமிழில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.
மயர்வற மதிநலம் பெற்று திருமாலுக்கும் வைணவத்திற்கும் தொண்டு புரிவது ஒன்றையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஆச்சரியமூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. இவர்களின் வரலாற்றை படிக்கும் போது நம்முள் ஒருவித பரவசமும் பக்தி நிலையும் உண்டாகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.