“பயண இலக்கியம் படைப்பதென்பது ஒரு தனி ஆற்றல். எப்படி சிறுகதை, புதினம், கவிதை எல்லாம் தனித்தனி ஆற்றல் தேவைப்படும் இலக்கிய வகையோ அப்படிப் பயண இலக்கியமும் ஒரு தனித்திறன் தேவைப்படும் எழுத்துக்கலை” என்பார் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்.
அந்த வகையில் தான் சென்று வந்த சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி எழுதுவதில் தனித்திறன் பெற்று தனி முத்திரை பதித்து வருகிறார் எழுத்தாளர் ஆர்.வி.பதி அவர்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அவர் எழுதியள்ள “திகைக்க வைக்கும் திண்டுக்கல்” என்ற நூல் ஆகும். திண்டுக்கல் பெயர்க்காரணம் கோட்டை ஓர் அறிமுகம் திண்டுக்கல் பூட்டு காந்தி மகாத்மாவும் திண்டுக்கல்லும் என திண்டுக்கல் பற்றிப் பல சுவையான அரிதானத் தகவல்களை அவருக்கே உரிய எளிய தமிழ்நடையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.