மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என பல வகையான கவிதைகள் நடைமுறையில் உள்ளன. இலக்கணம் தெரிந்தவர்களால் மட்டுமே மரபுக் கவிதையினை படிக்கவும் அது சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொள்ளவும் இயலும். இதன் தொடர்ச்சியாக அறிமுகமான புதுக்கவிதைக்கு இலக்கணம் என ஏதும் இல்லை. எவர் வேண்டுமானாலும் இக்கவிதையைப் படித்து பொருள் புரிந்து கொள்ளலாம். கவிஞனாக வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு புதுக்கவிதை வடிவம் இன்றுவரை சிறந்த பயிற்சிக் களமாக உள்ளது.