சில ஆண்டுகளுக்கு முன்னால் “சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை” என்ற சிறார் இலக்கிய இதழ்கள் தொடர்பான ஆய்வு நூலினை வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து “தற்கால சிறார் எழுத்தாளர்கள்”, “பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்” முதலான நூல்கள் வெளிவந்தன. தற்போது நான் எழுதியுள்ள “குழந்தை இலக்கிய முன்னோடிகள்“ என்ற நூலானது வாழ்ந்து மறைந்த சிறுவர் இலக்கிய சாதனையாளர்களைப் பற்றியது.
