சிறுவர் இலக்கியம் படைப்பது என்றால் கடினமான செயல் என்று பலர் கூறியிருக்கிறார்கள். காரணம் குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிறுவர் சிறுமியராக இருத்தல் வேண்டும். பெரியவர்கள் உபபாத்திரங்களாக வரவேண்டும். சிறுவர் சிறுமியரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்படுவதற்கு, எழுதுகிற எழுத்தாளருக்கு குழந்தைஉள்ளம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறப்பான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும். இவ்வகை ஆற்றல் பெற்ற திரு. ஆர்.வி.பதி எழுதியுள்ள கதைகளில் சிறுவர் சிறுமியர்களே முக்கிய கதாபாத்திரங்களாக சித்திரிக்கப்படுகின்றனர். அவர்கள் மூலம் ஒவ்வொரு கதையிலும் ஒரு படிப்பினை வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு ஆசிரியர் கதைகளை எழுதியிருக்கிறார்.