Agaramel Sriamirthavalli Thaayar Sametha Sripachaivaarana Perumal, Swami Muthaliyandan Devasthanam
By R.V.Pathy
பூவிருந்தவல்லிக்கு அருகில் அமைந்துள்ள அகரமேல் எனும் நசரத்பேட்டையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் சமேத ஸ்ரீபச்சைவாரணப் பெருமாள், ஸ்வாமி முதலியாண்டான் தேவஸ்தானத்தின் ஸ்தலபுராணம் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய இந்த நூலை எழுதியதில் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். இத்தலத்தின் மஹாசம்ப்ரோஷண விழா 06 ஜீன் 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டபோது என் மனதில் இத்தலத்தின் ஸ்தலபுராணத்தையும் பிறதகவல்களையும் திரட்டி ஒரு நூலாக அதுவும் மூன்று மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த ஆசை தற்போது கைகூடி புத்தகமாக வடிவம் பெற்றுள்ளது.