இவர் சிறுவர்களுக்காக எழுதிய 75 நூல்கள் பிரசுரமாகியுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல சிறுவர் இதழ்களில் இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் முதலானவை பிரசுரமாகியுள்ளன. தற்போது இவர் சிறுவர் இலக்கிய வரலாற்று நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பலப்பல சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.