வைணவத் தலங்கள் அடங்கிய “வளமான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற நூலினைத் தொடர்ந்து “சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத் தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்று இன்றும் மூன்று வைணவக்கோயில் நூல்களை எழுத இருக்கிறேன். இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.