சொர்க்கலோகத்தின் திறவுகோல் குழந்தைகள். இன்றைய குழந்தைகள்தான் நாளைய பெரியவர்கள். நாட்டை ஆளப்போகிறவர்கள். அவர்கள் நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்கப்படுவதன் மூலம் அவர்கள் மனம் பண்படும். சிறார்களின் மனத்தைப் பண்படுத்தும் செயலைச் செய்வதில் குழந்தை இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. குழந்தை இலக்கியத்தின் வெளிப்பாட்டிற்கும் புறஉலக நிகழ்வுகளை அறிவதற்கும் பெரிதும் பங்கு வகித்து வருகின்றன. சிறார் இதழ்கள் தமிழில் அதிக அளவில் வெளிவருகிறது என்றாலும் அவற்றைப் பற்றிய முழுத்தரவுகளும் ஒருசேரக் கிடைக்கவில்லை. அயராத தேடல் மூலம் அந்நிலையை “சிறார் இதழ்கள் அன்று முதல் இன்றுவரை” என்ற நூல் வெளியீட்டின் மூலம் எழுத்தாளர் ஆர்.வி.பதி நிறைவு செய்துள்ளார்.