தமிழில் தற்போது சிறுவர் இலக்கிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் நான் புதுச்சேரியில் பல எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. புதுச்சேரி ஒரு தனி மாநிலமாக இருப்பதால் அந்த மாநிலத்தின் சிறுவர் இலக்கிய வரலாற்றை நாம் ஏன் பதிவு செய்யக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. அதன் விளைவே இந்த புத்தகம்.