“அவன் பெயர் ஆபத்து” என்ற இந்த கற்பனைக் குறுநாவல் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும். வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றவே கூடாது. மீறி ஏமாற்றினால் அதற்குரிய விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும் என்பதே இந்த குறுநாவல் சொல்ல விரும்பும் செய்தி. இந்த நாவல் பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. ஆகையினால் தற்கால வரவுகளான மொபைல் போன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் முதலான விஷயங்கள் இந்த நாவலில் இருக்காது. நவீன சாதனங்கள் இல்லாத அக்கால அன்றாட வாழ்க்கையை இந்த குறுநாவல் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவலாம். வாசித்துப் பாருங்கள்.