வாசகர்களுக்கு வணக்கம். “அற்புத உயிரினங்கள் அதிசயத் தகவல்கள்” என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பூமியில் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் கடலில் பல உயிரினங்கள் என ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் பல சிறப்பான அம்சங்கள் இயற்கையிலேயே அமைந்துள்ளன. இவற்றைப் படிக்கும் போது இத்தகைய தகவல்கள் நமக்கு மிகுந்த வியப்பைத் தருகின்றன. இன்றைய மாணவ மாணவியர் இதுபோன்ற பல விஷயங்களை அறிந்து தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்த புத்தகம்.