வாசகர்களுக்கு வணக்கம்.
“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” எனும் நூல்களை எழுதியுள்ளேன. இது போன்ற புத்தகங்கள் உங்கள் மனத்தையும் உடலையும் தூய்மையாக்கி ஆரோக்கியமானை வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அறிந்த தினமும் அரைமணிநேரம் ஒதுக்கி சூரியபகவானை வணங்கி நல்லதொரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த புத்தகத்தை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
ஆர்.வி. பதி