2004 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தங்கள் உயிர்களையும் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பொருட்களையும் இழந்து தவித்தார்கள். 2004 ஆம் ஆண்டில் சுனாமி என்ற சொல் நம்மைப் பொறுத்தவரை மிகவும் புதியதாக இருந்தது. கடந்த நூறாண்டுகளில் சுனாமி இந்திய கடற்கரைப் பகுதிகளை தாக்கியதாக சரித்திரமில்லை. ஆனால், 2004-ல் தாக்கி பெரும் அழிவை விளைவித்து விட்டது. நாம் சுனாமியைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானது. இதை கருத்தில் கொண்டு 2004 ஆம் ஆண்டில் சுனாமி தாக்கிய சில நாட்களில் இந்த புத்தகத்தை நான் எழுதினேன். பலரும் இப்புத்தகத்தின் மூலம் சுனாமி பற்றி ஓரளவிற்கு அறிந்து கொண்டார்கள். சுனாமி பற்றி தமிழில் வெளியான முதல் புத்தகம் இதுவே.