நான் செங்கற்பட்டு ஸ்ரீஇராமகிருஷ்ணா பள்ளியில் படித்த ஒரு மாணவன். அதனால் என் சிறுவயதிலேயே நான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியும் அன்னை சாரதாதேவியைப் பற்றியும் சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் அறியும் பேறு பெற்றேன்.
மகான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஆன்மிக உரைகளை நிகழ்த்தியபோது இடையிடையே இறைவனையும் இறையுணர்வையும் புரிய வைக்க சிறுசிறு கதைகளைச் சொல்லுவார். அவ்வாறு சொன்ன பல கதைகளில் 25 சுவாரசியமான பயனுள்ள கதைகளைத் தொகுத்து இந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன்.
இந்த கதைகள் எளிமையானவை. படித்துப் புரிந்து கொள்ளுவதற்கு சுலபமானவை. ஆனால் இறைவனை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையான நல்ல பல கருத்துக்களை உடையவை.