தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் “தெனாலிராமன் கதைகள்”, “மரியாதை ராமன் கதைகள்”, “ஈசாப் நீதிக் கதைகள்”, “முல்லா கதைகள்” போன்று இராயர் அப்பாஜிக் கதைகளும் புகழ் பெற்ற ஒன்றாகும். வருடங்கள் பல கடந்தும் இத்தகைய கதைகளை வாசகர்கள் இன்றும் ஆர்வத்துடன் படித்து மகிழ்கிறார்கள்.
பல எழுத்தாளர்கள் தங்கள் கைவண்ணத்தில் இராயர் அப்பாஜிக் கதைகளை ஏற்கெனவே எழுதியுள்ளார்கள். முல்லா கதைகளை தொகுத்து எழுதிய நான் தற்போது தேர்ந்தெடுத்த பதினான்கு இராயர் அப்பாஜிக் கதைகளை எனது பாணியில் எளிய நடையில் எழுதியுள்ளேன். சில கதைகள் சுவாரசியமானவை. சில கதைகள் வியப்பூட்டுபவை.