ஆன்மிகத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிகக் கதைகள் உள்ளன. இவற்றில் 60 ஆன்மிகக் கதைகளைத் தேர்வு செய்து “பரவசமூட்டும் பக்திக் கதைகள்” என்ற நூலினை எளிய நடையில் எழுதியுள்ளேன். புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.