இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை”இராமாயணம்” மற்றும்”மகாபாரதம்” ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. இராமாயணம் பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தம். மகாபாரத காவியத்தை உங்களுக்காக”எளிய நடையில் மகாபாரதம்” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலை மிக சுலபமாகப் படித்து மகிழலாம். மகாபாரதத்தின் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.