சிறுவர் சிறுமியர் படித்து மகிழ ‘இரயில்வண்டி’ என்ற சிறுவர் பாடல்கள் நூலை எழுதி இருக்கிறேன். இதில் 35 கவிதைகளும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முழுபக்க படங்களும் இடம் பெற்றுள்ளன. சிறுவர் சிறுமியருக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருந்தாலும் இந்த நூலை எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த ஒரு நூலாகக் கருதுகிறேன். எனது இரயில்வண்டி நூலுக்கு உயிர் கொடுத்திருக்கும் ஓவியர் திரு.கி.சொக்கலிங்கம் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இந்த நூலுக்கு சிறப்பான அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்திருக்கும் சாகித்திய அகாதெமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மழலைக்கவிஞர் குழ.கதிசேரன் அவர்களுக்கு என் நன்றி. இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.