வணக்கம். இந்தியா ஒரு ஆன்மிக நாடு. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 36000 கோயில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாம் அடிக்கடி கோயிலுக்குச் செல்லுகிறோம். வீட்டில் விழாக்களை எடுத்து மகிழ்கிறோம். ஆனால் நம்மில் பலர் அனைத்தையும் பெயரளவிலேயேதான் தெரிந்து வைத்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினருக்கு நமது முன்னோர்களின் அருமை பெருமைகள் தெரிவதில்லை. அவற்றை எடுத்துக் கூறவும் யாரும் முயற்சிப்பதும் இல்லை. எங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான் இதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த முயற்சி. இதில் நாம் அன்றாடம் கேள்விப்படும் பலப்பல ஆன்மிக சொற்களுக்கு எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சிறுசிறு குறைகள் இருக்கலாம். சிறு தவறுகளும் இருக்கலாம். அப்படி இருப்பதாக அறிந்தால் அதைத் தயங்காமல் எனது மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். திருத்திக் கொள்ளலாம்.